Polladha Ulagathiley song from Tamil movie Jai Bhim starring Suriya, Lijomol Jose, K. Manikandan and Rajisha Vijayan in lead roles. Polladha Ulagathile lyrics penned by Yugabharathi, music by Sean Roldan and sung by Sean Roldan.

    Song Credits
    Movie: JAI BHIM
    Language: Tamil
    Song: Polladha Ulagathiley
    Music: Sean Roldan
    Singer: Sean Roldan
    Lyrics: Yugabharathi
    Polladha Ulagathile Lyrics - Jai Bhim

    Polladha Ulagathile Lyrics in Tamil

    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா

    எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா

    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா

    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா

    வேதனை மேலும் வேதனை
    தருவதும் உன் வேலை ஆனதோ
    உறவின்றி என் உயிர் நோவதோ

    கேட்டு நான் வாங்க வில்லையே
    கொடுத்த நீ வாங்கி போவதோ
    துணை இன்றி நான் தனியாவதோ

    காணாத கனவை நீ காட்ட
    வாழ்வு வந்ததே
    கை சேர்ந்த நிலவை பாராமல்
    வானம் சோர்ந்ததே

    வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேன்

    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா

    தேடியே கால்கள் ஓய்ந்ததே
    திசைகளும் வீழ்ந்து போனதே
    இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே

    வேர்வரை தீயும் பாய்ந்ததே
    வெறுமையில் நாட்கள் நீளுதே
    அதிகாரமோ விளையாடுதே

    ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
    ஏணி இல்லையே
    வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
    நாதி இல்லையே

    ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
    தள்ளாடுதே இதயம்
    இனி என்னாகுமோ ஏத்தகுமோ
    பதில் சொல்லாமல் போகாது காதல்

    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா

    எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா

    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா

    Share.